கவிதை - நினைவுகள் - ஜெப மலர்
தொலைதூரம் நீ இருந்தாலும்
தொலைத்து விடவில்லை நான் உன்னை...
விலகி நீ சென்றாலும்
இழந்து விடவில்லை நான் உன்னை..
சந்தோஷத்தை பகிர அருகில் இல்லையென்றாலும்
சோகத்தில் தோள் கொடுக்க வரவில்லை என்றாலும்
நேரம் தவறாமல் காலம் தாழ்த்தாமல்
வந்து விடுகிறது உன் நினைவுகள்...