கவிதை - என்னில் கலந்த உயிரே உனக்காக - ஜெப மலர்
துன்பம் நிறைந்த உலகில்
துவண்டு போய் நின்ற வேளை
துணையாய் வந்து கரம் கோர்த்து
துயரம் நீக்கிட்ட என் உயிரே...
உயிரோடு கலந்து மூச்சாக நிறைந்து
உணர்வாய் உறைந்திருக்கும் என் உலகே...
வாழும் இவ்வுலகம் சொர்க்கமாக
வரப்பிரசாதமாக வந்த என் துணையே...
இன்னும் பல பிறந்த நாள் கண்டு
இன்பத்தில் திளைத்து நீண்டாயுள் கண்டு
வளமோடு நலமும், சீரோடு சிறப்பும் பெற்று
வாழ்ந்திட வாழ்த்துகிறேன் இப்பிறந்தநாளில்...
...................... ப்ரியமுடன்..............
உன்னவள்
பி. கு : என் கணவருக்காக இந்த பிறந்த நாள் வாழ்த்து.