கவிதை - உன்னை போல - ஜெப மலர்
உன் அழகை பார்த்து நேசித்திருந்தால்
உன்னை விலகி போயிருப்பேனோ...
உன் பணத்தை பார்த்து பழகியிருந்தால்
உன்னை பிரிந்து போயிருப்பேனோ...
உன் குணத்தை பார்த்து நேசித்ததால்
உனக்குள் மூழ்கி கொண்டு இருக்கிறேனோ..
உன் அன்பு பார்த்து பழகியதால்
உனக்குள் அடிமையாகி போனேனோ...
உன்னை விட்டு விலகவும் முடியாமல்
உன்னை வெறுக்கவும் முடியாமல்
உனக்குள் என்னை தொலைத்து நிற்கிறேனே...
எத்தனை எத்தனை மானிடர்
இவ்வுலகில் பிறந்திட்டாலும்
உன்னை போல மீண்டும் ஒருவர்
உலகில் உதிப்பது இல்லையே...