(Reading time: 1 - 2 minutes)

கவிதை - வா நிஜம் இதே - ஜெப மலர்

கடந்த காலத்தை நினைத்தே

கலங்கி தவிக்கும் மனமே

கரைந்து கொண்டிருக்கும் 

நிகழ்காலம் உனக்கு தெரியவில்லையா..

விட்டு சென்ற உறவுகளை 

விட்டு கொடுக்க முடியாம‌ல் திணறும் நெஞ்சமே

விருப்பத்தோடு காத்திருக்கும் 

விலை மதிப்பில்லா அன்பை தொலைப்பதை உணரவில்லையா...

மறந்து போன உயிரை 

மறக்க துணியாத உள்ளமே

மறைந்து போகிற உன் 

மதிப்பற்ற நேசத்தை அறியவில்லையா... 

கடந்த காலம் முடிந்து விட்டது 

எதிர் காலம் நிலையற்றது

கையில் இருக்கும் நிகழ் காலத்தை

கருத்தில் கொள் என் மனமே

தவற விட்டால் மீண்டும் கிடைக்காத

நினைவுகளாய் மாறிவிடுமே.... 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.