(Reading time: 1 - 2 minutes)

கவிதை - ஒரு முறை வந்தால் - ஜெப மலர்

நான்  நானாக வாழ்ந்த காலம்

நினைத்து பார்க்கையில் நினைவில் வர மறுக்கிறது.. 

நீ என்னுள் வந்த பிறகு 

தொலைந்து போனேன் நான் உனக்குள்.. 

உனக்காய் என்னை மாற்றிய நான் 

எனக்காய் என்னை மாற்றிக் கொள்ள

வழி தெரியாமல் தடுமாறுகிறேன்... 

தெரியாமல் இருப்பது வழியா? இல்லை

தெரிந்து கொள்ள விரும்பாத மனமா

ஒரு முறை ஏற்றுக் கொண்ட மனம்

மறுமுறை விட மறுக்கிறதே

இது தான் விதியா

இல்லை மனதின் சதியா

மறக்க நினைத்தாலும் 

மறந்து போகிறேன் 

மறக்க நினைத்ததை மட்டும்.... 

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.