(Reading time: 1 - 2 minutes)

கவிதை - உயிரோடு ஒரு ஓவியமாய் - ஜெப மலர்

உன்னோடு நான் கழித்த நாழிகை ஒவ்வொன்றும் 

உருவமில்லா ஓவியமாய் தேங்கி நிற்கிறது மனதில்....

கை உரச அருகருகே நடை பழகிய

காதல் பயணம் பதிந்து கொண்டது கண்ணில்...

எதிரெதிர் அமர்ந்து இமைக்க மறந்து ரசித்து

எதிர்பார்ப்புடன் விழி எழுதிய உறவு

எழுதப்பட்டுவிட்டது வாழ்க்கையாய் இதயத்தில்....

சுற்றி இருக்கும் உற்றார்களை மறந்து 

விழிகளுக்குள் நிரப்பி கொண்ட உன் முகம் 

கலந்து விட்டது என் குருதியில்.... 

உயிரில் கலந்து உணர்வில் நிறைந்து

உயிரோடு ஒரு ஓவியமாய் மலர்ந்து விட்டாய் நீ எனக்குள்.... 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.