கவிதை - எனது பார்வையில் ... - கிருஷ்ணா
குளிர் காலத்தில் சூடான பானம்
வெயில் காலத்தில் குளிர்ந்த நீர்
மழை காலத்தில் சூடான உணவு
வருடங்கள் கழிந்த பின்பு சந்திக்கும் தோ(ழி)ழன்
நாம் நேசிப்பவரால் நேசிக்கப்படுவது
நம் குழந்தையின் முதல் முத்தம்
முதல் மாத ஊதியம்
முதல் காதலின் நினைவுகள்
அயல் நாட்டில் நம்மவரின் நட்பு
சில வருட இடைவெளியில் கொண்டாடும் திருவிழா
மனதிற்கு சுகமல்லவா ...