கவிதை - பயம் - ப்ரியசகி
சுயநலமான மனிதர்களால் மீண்டும் மீண்டும்
காயம் பட்டு என் சுயத்தை இழந்து நானும்
என்றேனும் அக்கூட்டத்தில் ஒருவராகி விடுவேனோ?
இல்லை இதே அப்பாவித் தன்மையால் மீண்டும் மீண்டும்
மனிதாபிமானத்தில் நம்பிக்கை கொண்டு வாழ்வு
முழுவதும் ஏமாற்றத்தால் எனையே தொலைப்பேனோ?