கவிதை - சந்திப்பு - ப்ரியசகி
பயணம் தொடங்கிய இடமும் ஒன்றல்ல
முடியப் போகும் இடமும் நிச்சயமாக ஒன்றல்ல
இடையில் கடக்கப் போகும் பாதையும் தூரமும் ஒன்றல்ல
பின் எதற்காக இந்த ஓரிரு நிமிட சந்திப்பு?
விதி வலியது என்று என்னிடம் வலியுறுத்துவதற்காகவா?
கடந்து கொண்டிருந்த வாழ்வு, நிமிடத்தில் ஓரிடத்தில் நின்றதேன்?
அமைதியான நீரோடை கல் பட்டு கலங்கியது ஏன்?
பதில் தேடவுமில்லை, தேவையுமில்லை...