கவிதை - கைம்பெண் - ப்ரியசகி
என் மனம் கல் போன்றது என்றேன்...
அதில் காதலெனும் உளி கொண்டு மிக
அழகாக சிற்பம் செதுக்கிட என்னால்
மட்டுமே இயலும் என்றான்...
பாலைவனத்தில் வண்ண மலர்கள்
மலர வாய்ப்பில்லை என்றேன்...
மணற் பிரதேசத்தில் மட்டுமே மலர்ந்து
மணம் பரப்பவும் சில மலர்கள்
இறைவனால் படைக்கப்பட்டுள்ளன என்றான்...
கைம்பெண்ணையும் பெண்ணாகக் கருதி
அன்பு செய்தவன் நீ ஒருவனே...
அதனால் முடிந்துவிட்டது என்று மூடிய
என் வாழ்க்கைப் பாதையை மீண்டும்
திறந்து செப்பனிடவும் தொடங்கி
விட்டேன் நம் மணநாளை எதிர்நோக்கி...