கவிதை - கள்வன் - ப்ரியசகி
அவன் கள்வன் தான்!!!
யாராலும் எத்தகைய ஆயுதத்தாலும் இத்தனை
வருடங்கள் திறக்க முடியாத என் மனச்சிறையை
ஒரே நொடியில் ஒரே பார்வையில் உடைத்தெறிந்து
அதனுள் அடைகாத்த அன்பெனும் அற்புதமான
பொக்கிஷத்தை முழுதாக தனதாக்கிக் கொள்ளும்
வல்லமை பெற்றிருக்கிறானே!!!
ஆகையால் அவன் கள்வன் தான்!!!