(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அவள்!  - ப்ரியசகி

பார்த்த உடன் மெய் மறக்கச் செய்யும் பேரழகியல்ல

ஆனால் என் விழிகளுக்கு அவளே ரதியானாள்!

கலகலவென்று பேசிச் சிரிக்கும் பேதையல்ல

ஆனால் என் இதழ்கள் இடைவிடாது

புன்னகைக்கும் படி செய்து விட்டாள்!

நான் உலகின் அதிசயங்களைக் கூட ரசித்தவனல்ல

ஆனால் இன்று கல்லையும் மண்ணையும் கூட

கண்டு ரசித்து கவிபாட வைத்து விட்டாள்!

யாரிடமும் எப்பொழுதும் எதனாலும் வீழ்ந்தவனல்ல

ஆனால் அவளோ ஒரே ஒரு ஓர விழிப் பார்வையில்

எழ முடியாதவாறு எனை வீழ்த்தியும் விட்டாள்!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.