கவிதை - நினைவுகள் நிற்பதில்லை - ப்ரியசகி
உன் கண்களை சந்திப்பதை நிறுத்தி விட்டேன்...
உன்னோடு பேச எண்ணி இரவு பகலாய் சேகரித்த
வார்த்தைகளையும் நெஞ்சோடு புதைத்து விட்டேன்...
உன் பார்வை படும் தூரத்தில் நின்று
உனை ரசிப்பதையும் நிறுத்தி விட்டேன்...
உனக்காகவே பிரத்யேகமாக என்னை அலங்கரித்துக்
கொள்வதையும் நிறுத்தி விட்டேன்...
போகும் இடமெல்லாம் நிழலாய் உனைத்
தொடர்வதையும் நிறுத்தி விட்டேன்...
ஏனெனில் எதிரெதிர் துருவங்கள் ஈர்க்கப்படலாம்
ஆனால் என்றும் இணைய இயலாது...
புரிந்தும் உனைச் சுற்றும் நினைவுகள்
மட்டும் என்றும் நிற்பதில்லை!!!