கவிதை - நிறைவேறா ஆசை! - ப்ரியசகி
நான் மறுக்கவும் மறக்கவும் முடியாதவாறு
எனை காதல் செய்தவன், கல்லறையில்
கண்ணயர்ந்து விட்டான், அவன் முன் நின்று
நான் அழுது கரைந்து கொண்டிருப்பதை அறியாமல்!!
கண்ணீர் துடைக்க அவன் கைகள் நீளாதா என்ற நிறைவேறா
ஆசையோடு, விழி நீர் காற்றில் கலக்க அவனருகே
மண்டியிட்டு, மனதோடு பேசிக்கொண்டு நான்!!!!!!!