(Reading time: 1 minute)

கவிதை - சாட்சி - ப்ரியசகி

நின் மகிழ்வில் சட்டென மலரும் என் வதனமும்,

உனைக் கண்டவுடன் இதழில் உறையும் புன்னகையும்,

உனது விலகலில் விழியோரம் கசியும் நீரும்,

வாழ்வின் முதலும் முடிவும் நீயே என

உரைக்க எண்ணும் உதடுகளும்,

உனதன்பைப் பெற ஏங்கும் மனமும்,

உன் நினைவை மட்டும் ஏந்திக்கொண்டு காலமெல்லாம்

வாழ்ந்திடத் துடிக்கும் இந்த நெஞ்சமும்,

சொல்லப்படாத காதலின் சாட்சியாய் என் கண் முன்னே!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.