கவிதை - கண்ணோடு கண்ணினை... - ப்ரியசகி
உன் கண்ணோடு கண்ணினை நோக்கவும்,
கைவிரல் கோர்க்கவும் ஆசை தான்..
அன்றோ கண்முன்னே நீ இருக்கையில்
தயக்கமும் நாணமும் தடையிட்டது,
இன்றோ தயக்கம் உடைகையில்
காற்றோடு கலந்துவிட்ட உன்
கண்களை காணவும் முடியவில்லை
நீர் திரையிட்ட என் விழிகளால்....
கைவிரல் கோர்க்கவும் காலமில்லை,
கல்லறையில் உனைக் கண்டதால்!!