(Reading time: 1 - 2 minutes)

கவிதை - நாகரிகம் - ப்ரியசகி

வசீகரிக்கும் கண்களில் மையெழுதி,

அலையென பாயும் கார்குழலில் பூச்சூடி,

செவிகளில் காதணிகள் கவி பாட,

செவ்விதழ்களில் இளநகை பொங்க,

கைவளைகள் கலகலக்க,

காற்சலங்கை மெலிதாய் ஒலிக்க,

பட்டுடுத்திய மங்கையின்

பொன் மஞ்சள் வதனம்

நாணத்தால் சிவக்க,

பூமித்தாயின் மனம் நோகாமல்

மெதுவாய் எட்டெடுத்து நடந்து,

அசைந்தாடும் முழுநிலவாய்

பெண்மை வாழ்ந்தது ஒரு காலத்தில்...

இன்றோ நாகரிகம் என்ற போர்வையில்

காப்பாற்ற யாருமின்றி சிக்கித்

தவித்துக் கொண்டிருக்கிறது, எது

சுதந்திரம் என அறியாமல்!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.