கவிதை - மீண்டும் ஒருமுறை... - ப்ரியசகி
எந்தையின் கைகளில் பொக்கிஷமாக,
கைப்பற்றி நடைபழகிடும் தேராக,
நெஞ்சில் சாய்ந்து துயிலும் பதுமையாக,
மடியில் தவழும் மழலையாக,
மகிழ்வில் விழி சிந்தும் அருவியாக,
பொற் பாதங்கள் வீடெங்கும் பதிய,
சிரிப்பொலி மனமெங்கும் நிறைய,
அவரின் கண்மணியாக கைப்பற்றி
இவ்வுலகை வலம் வரும் பருவம்
மீண்டும் ஒருமுறை வாராதோ???