கவிதை - என்னுயிரில் ஓர் அங்கமாய்... - ப்ரியசகி
உனையே நெஞ்சில் நிறைத்திட்டேன்...
நித்தம் உன் நினைவிலே எனை
தொலைத்திட்டேன்...
தினம் உனை ரசிக்க விழையும்
விழிகளை மூடவும் மனமில்லை...
உன் மணியொலி செவிகளை எட்டாது
பொழுது புலர்தலும் இல்லை, அந்தி
சாய்தலும் இல்லை...
உன் சிறு சிணுங்கலில் மேனி
சிலிர்க்காத நாளும் இல்லை...
என் கை விரல்கள் உன் பொன்மேனி
தழுவ மறந்ததும் இல்லை..
வழியெங்கும் சலிக்காது பேசிக்கொண்டே
என் பாதத்தோடு நீ பயணிக்கும் அழகை
சொல்ல வார்த்தைகளும் இல்லை...
காலமெல்லாம் என் கணுக்காலில்
தவமிருந்து, என்னுயிரில் ஓர் அங்கமாக
இறைவனிடம் வரம் வாங்கி
வந்தாயோ என் பாத கொலுசே???