(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மனைவியே மணாளனின் பாக்கியம்! - ப்ரியசகி

உள்ளம் கவரும் புன்னகையும்,

உன் ஒற்றை மூக்குத்தி மின்னலில்

ஒளிரும் நாணமும் கண்டே நிதம்

என் நாள் விடிகிறது...

கற்றைமுடி சரிந்து முகம்

தொடுகையில், சேர்ந்து சரிவது

என் இதயமும் தான்...

உன்  கோபத்திலும் மௌனமெனும்

மந்திர வார்த்தைகள் கேட்காமல்

நாட்கள் நகர்வதும் இல்லை...

நிதம் விழிகள் நித்திரை கொள்வதும்,

என் கைகளுக்குள் நீ இருக்கிறாய்

என்ற நிம்மதியில் மட்டுமே!

வாழ்வின் கரடுமுரடான பயணத்தின்

போதும், என் கைகோர்த்து

துணை நின்ற பேரின்பம் நீ!

எதிர்பார்ப்பில்லாமல் வாழ்நாள்

முழுவதும் எல்லையில்லா அன்பால்

எனை நனைத்த தேனருவி நீ!

வருடக் கணக்கில் என் வாழ்வில்

வாசம் செய்த மலரே, உன்னால்

உணர்ந்து கொண்டேனடி, மனைவியே

மணாளனின் பாக்கியம் என்று!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.