கவிதை - சொல்லடி ஒற்றை வார்த்தையில் - கார்த்திக் கவிஸ்ரீ
உன் கால்கொலுசின் ஓசையில்
விழித்துக்கொண்டது எனக்குள் காதல்,
தினம் தினம் தூங்க விடாமல்
எனக்குள் உந்தன் நினைவுகள்,
எழுந்தால் விழுகிறேன்,
விழுந்தால் எழுகிறேன்,
இது என்ன எனக்கு கிடைத்த வரமா??? சாபமா???
சொல்லடி ஒற்றை வார்த்தையில்...