(Reading time: 1 - 2 minutes)

கவிதை - என் காதலிக்கு ஓர் அன்பு கடிதம் - கார்த்திக் கவிஸ்ரீ

தாலாட்டிய தாயையும், தோள்மீது தூக்கி வளர்த்த தந்தையையும்,

ஒரு நாளும் நினைத்துக்கொண்டு உறங்கியதில்லை,

ஒரு முறை கண்களால் என்னை கவர்ந்த பெண்ணே, உன்னை ஒவ்வொரு நாளும்

நினைக்காமல் உறங்கியதும் இல்லை,

காதலும் கவிதையும் buy one get one போன்றது போல,

 என் காதலை கவிதைகளாய் காகிதத்தில் எழுதி கொடுத்தேன்,

காகிதத்தை கிழித்து என் கவிதையை வீசிச்சென்ற என் காதலியே,

புரிந்து கொள்ளத்தெரியாத உன்னிடத்தில் காலத்தை விரயம் செய்துவிட்டேன்,

என் கவிதையில் உள்ள காதலை புரிந்து கொள்கின்ற ஒரு பெண்ணுக்காக தொடர்ந்து

எழுதுகிறேன், என்றாவது ஒரு காதல் என் வீட்டு காலிங்பெல் அடிக்காதா என்று!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.