(Reading time: 1 - 2 minutes)

கவிதை - அன்புள்ள அப்பா - கார்த்திக் கவிஸ்ரீ

பத்துமாதம் என்னை சுமந்தாள் தாய்,

என்னை சுமந்த தாயையும் சேர்த்து சுமந்தார் தந்தை,

தான் பார்க்காத உலகத்தை  என் பிள்ளை பார்க்கட்டும் என்று தன் தோள்மீது
தூக்கி நடக்கிறார்,

நான் காலூன்றி நடைபோட வேண்டுமென்று , அவர் முட்டிக்கால் போட்டு என்னுடன்
நடைபோட்டார்,

வேலை சலுப்புகள் அதிகம் இருந்த போதிலும், என்னுடன் விளையாட்டில் பல
ஆனந்தமும் கொண்டார்,

வாழ்க்கையில் எப்படி வேண்டுமானாலும் வாழலாம் என்பதை மாற்றி, இப்படித்தான்
வாழ வேண்டுமென்று வாழ்ந்தும் காட்டினார்,

அவர் தேவைகள் பல இருந்தும், என் தேவைகளுக்கு முதலில் மதிப்பளித்தார்,

என் தந்தை இவரென்று கூறிக்கொள்வதை விட, அவர் மகன் நானென்று
கூறிக்கொள்வதில்  பெருமிதம் கொள்கிறேன்.

“நமக்கெனவே வந்த நண்பன் தந்தை” 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.