கவிதை - காதல் கொண்ட மனது - சிந்துஜா
காதல் கொண்ட மனது காத்திரு என்றது
நேசம் கொண்ட இதயமோ போதும் பொறுமை என்றது
கண்ணுக்குள் பொதிந்த உன்னை கண்டதும் கண்ணீர் வரவா என்றது
எத்துனை எத்துனை நாட்கள் ஆயினும் மனம் பொறுமைக் கொள் என்றது
கிட்டா நேசம்? சுவைக்கா பாசம்?
இதை மட்டுமே எதிர்நோக்கும் இதயம்
கிட்டுமா இவை யாவும் அறியேன் நானும்
அறியேன் நானும் என்றுக் கூறியதோ மனம்
அறிவாய் நீயே என்றதோ மூளை
எதையோ அறிந்தாய் எதையோ மறந்தாய் என்று துடித்தது இதயம்
துடித்த இதயமும் ஜீவனின்றி தவித்தது
தவித்த ஜீவனின் உயிர்ப்பாய்
கண்டேன் நான் உன்னை என் இதய வீணையை மீட்டிட வரும் தென்றலாய்...!