கவிதை - பெண் குழந்தைகள் வன்கொடுமை - இரா.இராம்கி
சிட்டுகள் சுதந்திரமாய் பறக்கும் முன்னே சிறகுகள் சிதைக்கப்பட்டதோ?
மொட்டுகள் மணம் வீசி மலரும் முன்னே,பலவந்தமாய் பறிக்கப்பட்டதோ?
தளிர்கள் தானாய் துளிர்க்கும் முன்னே வெட்டி வீசப்பட்டதோ?
எஞ்சிய வாழ்வெல்லாம், இப்பிஞ்சுகளை இழந்த பெற்றோர் மனம் ,விறகாய் தீயில் வீசப்பட்டதோ?
நதிகளும் நாடும்,பெண் எனப் போற்றும் திருநாட்டில் இக்கொடுமைகள் கூச்சமின்றி அரங்கேற்றப்ட்டதோ?
கொடூரமாய் வன்கொடுமை செய்யும் நயவஞ்சகர்களை நசுக்கவே, "போக்சோ" எனும் புதிய புயல் புறப்பட்டதோ;