கவிதை - தென்னிந்திய அறுசுவை விருந்து - இரா.இராம்கி
பாசிப்பருப்பும் , கடலைப்பருப்பும் பாங்குறவே பாலுடன் கலந்து,
முந்திரி ஏலம் சேர்த்து, முத்தாய்ப்பாய் முதலில் இலையில் ஈடப்பட்ட திவ்யமான பாயாசம்;
இன்று உறைந்த தயிரில், சுவையாக தயாரான அழகு வெள்ளரிப் பச்சடி;
பருப்புப் போட்டு, தனியாவும் தேங்காயும்
மிளகாயும் மிடுக்காய் அரைத்து அற்புதமாய் உருவான, ஒரு முருங்கை சாம்பார்;
வாயில் எச்சில் ஊற வைக்கும் ஒரு வசந்தமான வத்தல்குழம்பு;
புளிக்காத மோரில் புதிதாய் காய்த்த வெண்டையில் ஒரு மோகமோர்க்குழம்பு;
ரசனையோடு உண்ணும் அறுசுவை விருந்து, ரசமாய் உடலில் சேர, செரிமானம் சேர்க்கும், மல்லி மணம் கமழும், மாண்புடை ரசம்;
நினைத்தாலே இனிக்கும் ,முதியோர் இதழ்களையும் ஈர்க்கும்,முந்திரி திராட்சை முன்னே நெளியவும், பின்னே ஒளியவும், நெய்யொழுகும் இனியதொரு சர்க்கரைப்பொங்கல்;
லேசாக எண்ணெய் விட்டு, நன்றாக வேக வைத்து, நாவிற்கு நல்லதொரு அவரைப் பொறியல்;
தாராளமாய் எண்ணெய் விட்டு,நன்கு பொறித்தாற் போல் வதக்கி எடுத்த ஒரு உருளை பொறியல்;
விதையெல்லாம் நீக்கி, வித்தியாசமாய் செய்யப்பட்டு, நம் இலையில் ஈடப்பட்ட பூசணிக்காய் கூட்டு;
லேசான கசப்புடன், நம்மைக் கவரும் பாகற்காய் வருவல்;
அப்பொழுது பொறித்து அப்பொழுதே இலையில் விழுந்த
" மொறு மொறு" அப்பளம்;
மாதுளங்கனி முத்துகளை தூவி,
திராட்சை கனிகளையும்
சேர்த்து, கெட்டித் தயிரில் தயாரான ஒரு தனிச்சுவை தயிர்சாதம்; தொட்டுக்கொள்ள, மாஇஞ்சியும் மாங்காய் ஊறுகாயும்;
வகை வகையாய் சுவைத்த வாய்க்கு, கொழுந்து வெற்றிலையும், பாக்கும்;
சற்றே நா சிவக்க,
திண்ணையில் சில நிமிடம் வெட்டிக் கதைகள் பேச,
பல நிமிடம் வெறுந்தரையில் ஒய்யாரமாய் ஓய்வெடுக்க, வேறென்ன வேண்டும் வாழ்வில்!!!!