கவிதை - ஒருவராய். .. - கார்திகா.ஜெ
அந்திமாலை நேரம்
ஆற்றங்கரை ஓரம்
இளங்காற்றின் சாரலில்
ஈரம் மாறா நினைவில்
உடனிருந்த நொடி
ஊற்றாக;
என்னவளின் கண்ணிமையில்
ஏக்கம் தீர
ஐயத்தோடு கை பற்றிய தருணம்
ஒலியில் நிறைந்த காற்சலங்கில்
ஓயாத அலை ஓசை என் இருதயத்தில்.
ஔ என்ற கணத்தில் இருவருள் ஒருவராய்.