காதலர் தின சிறப்பு கவிதை - தனிமையும் நினைவுகளும் - கோகுலப்ரியா
நீ என்னை விட்டுச் சென்றாலும்
தனிமையை உணரவில்லை நான்
காரணம் நீ தந்த நினைவுகள்
ஆம் – நீ கொடுத்த நினைவுகளில்
காண்கிறேன் தினமும் உன்னை
தனிமை எனக்கு மிகவும் பிடித்துப்போனது
ஏனெனில் என் தனிமையில் இனிமையாய்
அசை போடுகிறேன் நம் நினைவுகளை
காலம் முழுவதும் ஒன்றாக
வாழ ஆசைப்பட்டேன் உன்னோடு
இன்று வாழ்கிறேன் நம் நினைவுகளோடு
உயிர் உடலை விட்டு பிரிந்தாலும்
உடல் மண்ணை விட்டு பிரிந்தாலும்
அழியாத ஆன்மாவை போல்
அழியாதிருக்கும் உன் நினைவுகள்
இல்லையில்லை நம் நினைவுகள்!!
என்றும் நீங்கா நினைவுகளுடன்,
செ. கோகுலப்ரியா