(Reading time: 1 - 2 minutes)

கவிதை - மூன்றாம் பால் - கோகுலப்ரியா

பெற்றோரின் அரவணைப்பு

உடன்பிறந்தோரின் பாசம்

சொந்தங்களின் நேசம்

நண்பர்கள் பட்டாளம்

நல்ல கல்வி

கௌரவமான வேலை

காதலில் வெற்றி

மகிழ்வான குடும்பம்

நிம்மதியான வாழ்க்கை

இவையாவும் அடைந்திருப்பேன்    

என் அடையாளத்தை மறைத்திருந்தால்...

 

ஆம்!! சமூகத்தின் ஏளனப் பேச்சுகளுக்குப் பயந்து

நிருவுரு மாற்றத்தால் மாற்றமடைந்த

என் அடையாளத்தை மாற்றியமைக்காமல்

நான் நானாக இல்லாமல்

எனக்கும் எனைச் சான்றோர்கும் உண்மையாய்யிலாமல்

எனக்குள் என்னைத் தொலைத்து

என் உணர்வுகளை சிறைவைத்து

தினம் தினம் குற்றவுணர்ச்சியுடன்

என் வாழ்வை வாழ்ந்து இருந்தால்

இவையாவும் அடைந்திருபேன்!!! 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.