கவிதை - தாய்மை - கோகுலப்ரியா
பூப்பெய்தவில்லை
மாதாந்திர உதிரப்போக்கு சிந்தவில்லை
கலவியில் ஈடுபடவில்லை
ஈறைந்து மாதம் கரு சுமக்கவில்லை
மசக்கையில் மாங்காய் கடிக்கவில்லை
பிரசவத்தில் துடிக்கவில்லை
தாய் அமுதம் சுரக்கவில்லை
தாய்ப் பால் ஊட்டவில்லை
இருந்தும் தாயானேன்
என் திருநங்கை மகளுக்கு
திருநங்கைத் தாயானேன்!!!