கவிதை - பிறப்பு - கோகுலப்ரியா
அவனும் அவளுமாய் கலந்த
என் பிறப்பை
கடவுளின் சாபமென்றார்கள்
நான் மரபணு பிழை என்றேன்
ஓவ்வோர் சாபத்திற்கும் ஓர்
விமோட்சணம் உண்டு
ஓவ்வோர் பிழைக்கும் ஓர்
திருத்தம் உண்டு
விமொட்சனத்தைப் பெற்று
பிழையை திருத்தி
புதியதோர் பிறப்பெடுத்தேன்
திருநங்கை எனும் சிவசக்தியாக!!!