கவிதை - (வி)தி - கோகுலப்ரியா
கடவுளின் குழந்தைகள்
“அனாதைகள்”
கடவுளின் பிழைகள்
நாங்கள் - “திருநங்கைகள்”
இருவருக்கும் ஓர் ஒற்றுமை உண்டு
அவர்கள் பெற்றோரால்
வீதிக்கு தள்ளப்பட்டனர்
நாங்கள் பெற்றோர் இருந்தும்/ பெற்றோரால்
வீதிக்கு விரட்டப்பட்டோம்
வீ(வி)தி எதுவாயினும்
துணிந்து வீறுகொண்டு எழுந்து
புதியதோர் வரலாறு படைப்போம்!!