(Reading time: 1 - 2 minutes)

கவிதை - சாபம் - கோகுலப்ரியா

எது சாபம்

அவனில் இருந்து அவளாக மாறினேன்

அது சாபமா

 

நிருவுரு மாற்றத்தால்

உருமாறினனே

அது சாபமா

 

உருமாறி பெயர்மாறி

புது அவதராம் ஒன்று கண்டேன்நான்

அது சாபமா

எது சாபம்

 

ஏறபென்றால் என்னவென்று அறியாத

சிறு பாலகனை ஆழ்துணை கிணற்றில்

எண்பது மணி நேர போராட்ட முடிவிற்கு பிறகு

மீட்க முடியாமல் பறி கொடுத்தோமே

அது சாபம்

 

உன் சுயவிளம்பரத்தின் வெளிப்பாடாக

பதாகை என்ற பெயரில்

தன் எதிர்கால இலட்சியங்களை நோக்கி

பயணித்த பெண்ணின் உயிரைக் குடித்து

அவள் பெட்றோரின் கனவுகளை கற்பனையாக்கினோமே

அது சாபம்

 

நல்ல கல்வியறிவு இருந்தும்

ஒரு ஏழை மாணவியின்

மருத்துவ கனவை சிதைத்தோமே

அது சாபம்

இன்னும் இன்னும் இன்னும் எத்துனை சாபங்கள்

என்னில் அடங்கா பாவங்கள்

 

சாபங்களை அழித்து

பாவங்களை தொலைத்து

புதியதோர் பயணத்தை தொடங்குவோம்

விமோசனத்தை தேடி!!!

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.