கவிதை - கலப்படம் - கோகுலப்ரியா
குடிக்கும் நீரில் கலப்படம்
அருந்தும் பாலில் கலப்படம்
உண்ணும் உணவில் கலப்படம்
புசிக்கும் பழத்தில் கலப்படம்
எங்கு இல்லை கலப்படம்
எதில் இல்லை கலப்படம்
தாய்ப் பாலைத் தவிர
இவையாவும் கலப்படமென
தெரிந்தே ஏற்கும் மனிதனே
ஆண் பெண்ண ஹார்மோன்களின் கலவையால்
கலப்படமாகி இன்று திருநங்கையாய்
மாறி நிற்கும் எம்மை மட்டும்
ஏற்காதது ஏனோ!!