காத்திருக்கிறாள்… - சுபஸ்ரீ
இறைவா!!!!!
உன்னை நேரில் சந்திக்க வேண்டும்
இந்த பக்தைக்கு பாசுரமும் பாட தெரியாது
அபிஷேகம் செய்யவும் தெரியாது
இவள் ஒரு ஆத்தீக பகுத்தறிவாளனி
இவளுக்குள் ஐய்யங்கள் பல ????
அவை
இறைவா நீ படைக்கும் போது
சிலருக்கு அழகை கொடுக்க மறந்தாய்
சிலருக்கு அறிவை கொடுக்க மறந்தாய்
சிலருக்கு அறத்தை கொடுக்க மறந்தாய்
சிலருக்கு அன்பை கொடுக்க மறந்தாய்
சிலருக்கு அங்கத்தை கொடுக்க மறந்தாய்
சிலருக்கு அரோக்கியத்தை கொடுக்க மறந்தாய்
இத்தனை தவறையும் நீ செய்துவிட்டு
மறக்காமல் இதற்குரிய தண்டனையை மட்டும்
விதி என்ற பெயரில்
மானிடருக்கு ஏன் கொடுத்தாய்?
இவளை சந்திக்க மறந்துவிடாதே கண்ணா…
காத்திருக்கிறாள் கேள்வியுடன் உனக்காக
பதில் அளிக்க வருவாய் என்ற நம்பிக்கையுடன்.
{kunena_discuss:779}