கவிதை - தவறுகளில் அன்பு - பிரவீண் பாலி
துரோகம் தவறாக தெரியவில்லை
உன்னை காதலிக்க பெற்றோர்களுக்கு துரோகம் செய்த போது
சண்டை தவறாக தெரியவில்லை
உன்னிடம் காதல் சண்டையிட்டபோது
கோபம் தவறாக தெரியவில்லை
உன்னிடம் அன்பாக கோபித்துக் கொண்டபோது
பொய்கள் தவறாக தெரியவில்லை
உனக்கு ஆச்சர்யம் என்னும் அன்பு காட்ட நினைத்தபோது
என்ன மாயமடி
கொலை கூட தவறாக தெரியவில்லை
நீ கிடைக்காவிட்டால் என்னை நானே தற்கொலை செய்துகொள்வேன் என்று நினைத்தபோது...