கவிதை - எங்கள் தேவதை! - நிஷாந்த் நிவின்
பாலைவனமும் சோலைவனமாய் மாறிவிடும்
அவளது பொற்பாதம் பட்டால்
பட்டமரமும் துளிர்விட்டு மலரும்
அவளது விரல்நுனி தொட்டால்
கடவுளும் கோவிலுக்குல் தவமிருப்பார்
அவளது வருகையை நோக்கியே
அவள் தேவலோகத்திலிருந்து தரையிறங்கிய
அழகான குட்டி தேவதை!.