(Reading time: 2 - 4 minutes)
Girl

கவிதை - மழை வரும் அறிகுறி - வாணி லாவண்யா

விடாது பெய்யும் அடைமழை போல

தொடாமல் தொடும் அவன் பார்வை என்னை காதல்  வெள்ளத்தில் மூழ்கடித்து விட்டு செல்கிறது..

உன் பார்வை தொடா தூரம் நான் போனால் மழை காணா வறட்சி நிலமாய் மாறி விடுகிறது என் இருதயம்..

ஒவ்வொரு முறையும்  நீ என்னை கடந்து செல்லும்போது உன் பார்வை சாரலில் என்னை நனைத்து சிலிர்க்க வைக்கிறாய்..

உன் பார்வையில் நனைந்த விழிகள்  இன்று உன் பிரிவு என்னும் இடியின் தாக்கத்தில் மழையை கண்ணீராய் பொழிகிறது...

என் வாழ்வின் முக்காலத்திலும் மழை என்னும் தேவதையை பரிசளித்து வரம் தந்த மேகத்தை புன்னகையுடன் பார்த்தவாறே கடந்து செல்கிறேன்..

கடந்த காலத்தில் சில்லென்று அங்கம் வருடி நிகழ்காலத்தில் புயல் அடித்து சிதற செய்து

எதிர்காலத்தில் பிரபஞ்சமே குளிரால் உறைந்து கிடக்க எனக்கு மட்டும் உன் பார்வையால்  தீ முட்டி குளிர் காய வைக்க நீ வருவாய் என ஏங்கி ‌ காத்திருப்பேன் உனக்காக...

  

அந்தி நேர வானம்

ஜன்னலோரம்

மழைதூரல்களின் செல்ல சினுங்கல்

காதோரம் உரசும்  சில்லென்ற காற்று

நினைவடுக்குகளில் உன் நியாபகம்

நான் உயிர் வாழ போதுமானது...

  

என்னை நனைத்து நினைத்து திகைக்க வைக்கும் உன் காதல் பார்வை என் உயிரில் கலந்து  பெண்மை திருடி சென்றதை எண்ணி எண்ணி அழுகிறேன் மழை நூலின் இடுக்குகளில் உன் முகம் காண முடியுமா என்று..

  

உன் நினைவில் வாடும் என் இதயத்திற்கு

எத்தனை கோடி இன்பம் இந்த உலகில் கொட்டி கிடந்தாலும் உன் பார்வை தரிசனமே வரம்..

  

ஒவ்வொரு முறையும் வானம் இருட்டி மழை வரும் முன்பு என் நிறைவேறா காதலை எண்ணி எண்ணி என் கண்களில் மழை இடி மின்னலுடன் பொழிய ஆரம்பித்து விடுகிறது...

நீ

நான்

மழை

காதல்.

எந்த மதுவாலும்

ஈடு கொடுக்க முடியாது

உன்னை நினைக்கும் போது வரும் போதைக்கு முன்..

எப்போதாவது வந்து போகும் பருவ மழை போல அரிதாகக் கிடைக்கிறது எனக்கும் உன் ஓரவிழி பார்வையும் இதழோரம் துடிக்கும் புன்னகையும்....

மழைநீரை சேகரிக்கும் மழைநீர்த் தொட்டி போல உன் பார்வையையும் புன்னகையையும் சேகரித்துக் கொள்கின்றது என் இதயத்தை  தொட்டி...  

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.