கவிதை - தேவதைகளின் தேவதை - வாணி லாவண்யா
தவமாய் தவமிருந்து பிள்ளை பெறும்
உலகில்
வேண்டாம் என சொன்னவள் வயிற்றில் வந்துதித்த தேவதையடி நீ...️
அழகிற்கு புது இலக்கணம் வகுத்த
பொக்கை வாய் சிரிப்பு தேவதையடி நீ..️
இத்தனை வருட வாழ்கையின் சிரிப்பை பொய்யென உரைத்து உண்மை மகிழ்ச்சியை தந்த
வாழ்க்கையின் வரமாக வந்த தேவதையடி நீ...️
என் வாழ்வை எண்ணில் தவிர்த்து உன்னில் தேட வைக்கும் தேவதையடி நீ...️
உன் ஈர முத்தங்களின் அன்பில்லாமல்
என் துயில் கலைவதில்லையடி️
உன் முகம் பார்த்து ரசிக்கும் ரசனையில்
என் முகம் மறக்க வைக்கும் தேவதையடி நீ...️
இதுவரை வாசிக்க படாத தெய்வ இசையின்
சொந்தக்காரியடி நீ...️
பனிக்கட்டி மழையாய் சிலிர்க்க வைக்கும் உன் புரியாத மழலைப்பேச்சு...,️
வானவில்லில் இருந்து சிதறிய துளியாய் பரவசப்படுத்தும் உன் சிரிப்பு..️
என் உயிரை உன் காலடியில் வீழ்த்திய தேவதையடி நீ...️
ஜென்ம ஜென்மமாய் தொடரும் பந்தம் காதலில் மட்டும் அல்ல
தாய்மையிலும் தந்த
தேவதைகளின் தேவதையடி நீ...️
என் ஒட்டுமொத்த உலகத்தையும் தன் பிஞ்சு கைகளில் அடக்கிய தேவதைகளின் தேவதை... ️
என் மகள்...️️