கவிதை - முத்தம் - கிருஷ்ண பச்சமுத்து
அவள் உறங்கும் போது
பார்த்து, ரசித்து
காதோரம் இதழ்
பதிக்கையில்
ஒலிக்கும்,
“ஹ்ம்ம்” முத்தம்!
திருமணத்திற்கு முன்னே,
தவறென்றஞ்சி,
இதயம் வேகமெடுக்க,
“வேண்டாம்” போராட்டத்தில்
தோற்ற 'தோல்வி முத்தம்’!
திரும்பி நிற்கையில்
பின்னாலிருந்து
தோளில் பதியும்,
'ஒளிவு முத்தம்'!
குளிர்போக்க
உடல்முழுதும்
அக்கரையோடு
போர்த்திவிடும்,
'கோர்வை முத்தங்கள்'!
பணிச்சுமைக்கு
நடுவே,
நொடிமுள்ளின்
ஓசையொத்து
விழும், ‘நொடிமுத்தம்'!
கண்ணுக்கொன்று!
காதுக்கொன்று!
கன்னதிற்கொன்று!
.
.
.
இதழ்பதித்தலில்
மட்டும் கவனம்!
எண்ணிக்கை
என்னவானால்
எனக்கென்ன?
இதழ்கள்
என்னதான்
உடல்வழியே
பயணம் போனாலும்,
அவள் இதழ்கள் வரும்போது
சற்றுநேரம் இருந்து, உண்டு,
நீர்ப்பண்டம் மாற்ற
தவறுவதேயில்லை!
“ஆழ் முத்தம்”!