தொடர்கதை - உன் மனதில் இருப்பது நானும் என் காதலும் மட்டுமே - 12 - கண்ணம்மா
மனதின் கலக்கம் முகத்தில் காட்டாது ரவிவர்மணின் ஓவியப்பதுமையாய் காற்றில் குழல் அசைய, அண்ணமாய் அசைந்து வந்தாள். ஒப்பனை என்பது நம் கண்களை பொருத்தாதே? அவள் ஒரு பேட்சிக்குக் கூட முகத்தில் எந்த ஒப்பனையும் இல்லாமல் பளிங்கு முகத்தின் பால்வண்ணம் கூத்தாட அவள் நெற்றியில் குங்குமத்தால் வட்டவடிவில் பொட்டிட்டு இருந்தாள். மனதாே அவள் பாதத்தில் சரணாகதி ....
ஆதிபா என்று அவள் அழைக்கும் வரை ஈஷ்வருடன் பேசியபடிஇருந்த வீட்டின் அங்கத்தினர், பல வருடமாய் ஓடிய இந்த இரண்டு வருடத்தில் இவள் சேலை அணிவதைத் தவிர்த்து வந்ததும் இன்று கோவில் சிலையாய் எலிமையில்லும் எழிலோவியமாய் வருபவளை ஆச்சரியமாகப் பார்த்தனர். அவள் வந்த செய்தி மட்டுமே கேட்ட சிவகாமி அவள் வருவதற்காய் காதிராமல் ஓடிப்போய் அவளை அணைத்துக்கொண்டார். சிவமா ... என்று தன் பெரியன்னையை அணைத்தவள் நிமிர்ந்து அவர் முகம் காண கண்களில் அடைமழைகாலமாய் .
பிளீஸ் .... சிவமா அழாதயேன் என்று கொஞ்சியவள் தன் இரு சின்னமாவையும் அனைத்துக் கொண்டாள். இவள் என்றுமே அந்த வீட்டுக் குழந்தையே என்பதை நிரூபிப்பதாய் அவளை தன் மடியில் அமர்த்திக்கொண்டார் அவள் கடைசி சிற்றப்பா. அவள் வளர்ந்த மங்கை என்பதையெல்லாம் அவர் மரந்துட்டார்ப்பா. ஆதியை மட்டும் ஆதிப்பா என்று அழைப்பவள் அவள் தந்தையுடன் இரு சித்தப்பாக்களையும் அப்பா என்றே சிறுவயது முதல் அழைத்ததால் அவர் மடியில் அமர்த்திக் கொண்டதும் பசிக்குரமாதிரி இருக்குலப்பா என்று தோலைப்பிடித்து கேட்டாள்.
இது அவள் வழக்கம் அவளின் பார்த்த சாரதி அப்பா சற்று யாரும் முகம் வாடி இருந்தாலும் அவர்களை உண்ணவைத்த பின்பே பேட்சை ஆரம்பிப்பார். வேலையாட்களையும் சாப்பிட்டே வேலைசெய்ய அனுமதிப்பார். அரைஜான் வயத்துக்குத் தான் இந்தப் பாடு அதை கவனிப்பதே முதல் வேலை என்பார். தன் சிற்றப்பனிடம் சேர்ந்தவள் இதில். கணிகாம்பிகையும் அதைப் புரிந்து மகள் அப்பாவை சமாதானம் செய்யவே பேட்சை மாற்றுகிறாள் என்று. வாடா குட்டி சாப்பிடலாம் என்று தன் கண்களைத் துடைத்தவாறு அழைத்தார். அப்பா என்று அமிர்த ராஜன் பக்கம் திரும்பியவள் நான் உங்கள் பேட்சை கேட்டு சமத்தா இருந்தால் சாக்லேட் பேக்ட்ரிக்கு கூட்டிட்டு போவிங்கலப்பா என்று சிறு பிள்ளையாய் நாவைக் குழைத்து இப்போதே சுவையாய் சாக்லேட் பாரை உண்ணும் சுகத்தை முகத்தில் காட்டினாள் குழந்தையாய். மகளுக்கு சாக்லேட் என்றால் உயிர் என்று தெரிந்து தானே அவள் 8 வயதில் அவள் பெயரிலேயே ஆரம்பித்தார் அமிர்தன் நிவீஷா பிறந்தும் அவள் இரண்டாம் மகள் என்றே