(Reading time: 2 - 4 minutes)
பொன் அந்திச் சாரல் நீ

Chillzee KiMo Book Reviews - மாற்றம் தந்தவள் நீ தானே - அமுதினி

Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் அமுதினியின் நாவல் 'மாற்றம் தந்தவள் நீ தானே'.

நம் Chillzeeயில் தொடர்கதையாக வந்து, இப்போது Chillzee KiMoவில் நாவலாக பப்ளிஷ் ஆகி இருக்கும் நாவல் இது. 

 

கதை சம்மரி:

தையின் ஹீரோயின் மஞ்சரி, ஹீரோ ஆதவ்!

மஞ்சரி கிராமத்தில் பிறந்து வளர்ந்தவள். அவளுடைய அப்பா அந்த கிராமத்தில் பெரியவர்.

ஆதவ் வெளிநாடுகளில் படித்து பெரிய நிறுவனத்தை நிர்வகிப்பவன்.

மஞ்சரிக்கு நிச்சயம் செய்திருந்த கல்யாணம் திடீரென நின்றுப் போகிறது. கிராமத்து மக்கள் மஞ்சரியை பற்றி தவறாக பேசி விடக் கூடாது என்று வேறு ஒரு மணமகனை பார்க்க நினைக்கிறார்கள். அப்போது அங்கே இருக்கும் ஆதவின் பாட்டி மஞ்சரியை தன்னுடைய பேரனுக்கு கல்யாணம் செய்து வைக்க ஆசைப்படுகிறார். ஆதவும் பாட்டியின் ஆசைக்கு சம்மதிக்கிறான்.

மஞ்சரி, ஆதவ் திருமணம் பெரியவர்களின் ஆசியுடன் நடைப்பெறுகிறது.

பிறப்பு, வளர்ப்பில் இரண்டு துருவங்களான ஆதவ், மஞ்சரி திருமணம் வெற்றிப் பெற்றதா இல்லையா என்பது மீதிக் கதை.

 

தையின் ஹீரோ, ஹீரோயின் மஞ்சரி, ஆதவ் இருவருமே மனதில் நிலைக்கிறார்கள்.

கோவைத் தமிழ், உரையாடல்களில் பரவி இருக்கும் நகைச்சுவை, ரசிக்க வைக்கும் உறவுகள் என அனைத்தும் கதையில் இயல்பாக இருக்கிறது.

கதையின் ப்ளோ யூகிக்கும் விதத்தில் இருக்கிறது. அடுத்து என்ன நடக்கும் என்பதை ஓரளவிற்கு எதிர்பார்க்க முடிகிறது.

மஞ்சரியின் அப்பாவித்தனமும், ஆதவின் தூய்மையான அன்பும் நாவலை படித்து முடிக்கும் போது முழு நிறைவைக் கொடுக்கிறது.

 

மொத்தத்தில், கிராமத்து மணம் வீசும், குடும்பம் & காதல் வகையைச் சார்ந்த நல்ல ஒரு கதை.

 

கதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.

 

டுத்து Chillzee KiMo வில் வெளியாகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் பிந்து வினோத்தின் 'வானும் மண்ணும் கட்டிக் கொண்டதே' நாவல் சம்மரியுடன் சந்திப்போம்.

மாற்றம் தந்தவள் நீ தானே போலவே இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள்.

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.