Chillzee KiMo Book Reviews - தவமின்றி கிடைத்த வரமே - பத்மனி செல்வராஜ்
Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் பத்மினி செல்வராஜின் நாவல் 'தவமின்றி கிடைத்த வரமே'.
நம் Chillzeeயில் தொடர்கதையாக வந்து, இப்போது Chillzee KiMoவில் நாவலாக பப்ளிஷ் ஆகி இருக்கும் கதை இது.
கதை சம்மரி:
கதையின் ஹீரோ வசீகரன், ஹீரோயின் பனிமலர்.
பிரபல கார்டியாலஜிஸ்ட் வசீகரன். அம்மா, அப்பா, தங்கை என்ற சந்தோஷமான் குடும்பம் அவனுடையது. மனதுக்கு பிடித்த பெண் கிடைக்க காத்திருக்கிறான் வசீகரன்.
அவனுக்கு பிடித்த பெண்ணாக வருகிறாள் பனிமலர். அவளுடைய பப்ளி குணத்தால் காதல் வசப்படுகிறான் வசீகரன். அவனுடைய காதலை சொல்ல நினைக்கும் போது அவளுடைய கல்யாண பத்திரிக்கை கொடுத்து அவனுக்கு அதிர்ச்சி கொடுக்கிறாள் பனிமலர்.
வரதட்சணை காரணமாக பனிமலரின் கல்யாணம் தடைப் படுகிறது. அவளுடைய அப்பா அதனால் நோயாளி ஆகிறார். அந்த நேரத்தில் வசீகரனுக்கும் பனிமலருக்கும் எதிர்பாராத கல்யாணம் நடக்கிறது.
இந்த கல்யாணம் வெற்றி பெற்றதா? வசீகரன் காதல் பனிமலருக்கு தெரிய வந்ததா என்பது மீதிக் கதை.
கதாபாத்திரங்களில் முதலில் இருந்து நம்மோடு பயணிக்கு வசீகரன் மனதில் ஒட்டிக் கொள்கிறான்.
அன்பான குடும்பம், கலகல பேச்சு, காதல், கலாட்டாக்கள் என கதை ரசிக்கும் படி இருக்கிறது
ஆங்காங்கே கதை பாதையை விட்டு விலகி வேறு காட்சிகள் வருவது கதைப்போக்கை மட்டுப்படுத்தி ஸ்டார்ட் - ஸ்டாப் - ஸ்டார்ட் என்ற உணர்வைக் கொடுக்கிறது.
வசீகரன் பனிமலர் நடுவில் இருக்கும் நட்பு கலந்த அன்பு, காதல் கலந்த அன்பாக மாறும் ப்ராசஸ் மொத்த கதைக்கும் ஒரு நல்ல திருப்தி உணர்வை கொண்டு வருகிறது.
மொத்தத்தில், இனிய ஒரு காதலை நமக்கு அறிமுகப்படுத்தும் நல்ல ஒரு காதல் கதை.
கதையை இது வரை படிக்கவில்லை என்றால் கட்டாயம் படியுங்கள்.
அடுத்து Chillzee KiMo வில் வெளியாகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் பிந்து வினோத்தின் 'சிங்கப்பெண்ணே' நாவல் சம்மரியுடன் சந்திப்போம்.
தவமின்றி கிடைத்த வரமே போலவே இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள்.
- அபூர்வா