Chillzee KiMo Book Reviews - மலர்களே! மலர்களே!! - ஸ்ரீஜா வெங்கடேஷ்
Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee KiMo எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷின் நாவல் 'மலர்களே! மலர்களே!!'.
அந்த கதையின் சுருக்கத்தை தெரிந்துக் கொண்டு, கதையின் + & - களை அலசுவோம் வாங்க.
கதை சம்மரி:
கதையின் ஹீரோ செந்தில், ஹீரோயின் அமுதா.
தன் வீட்டில் அமுதா உட்பட இன்னும் பல குழந்தைகளுக்கு அடைக்கலம் கொடுத்து வளர்க்கிறார் சேது லட்சுமி. அவருக்கு ராஜூ எனும் பெரியவர் ஒருவரும் உதவி செய்கிறார்.
அமுதாவை காதலிக்கும் செந்தில் அவளை பெண் கேட்டு சேது லட்சுமியை சந்திக்க வரும் போது பூகம்பம் வெடிக்கிறது.
சேது லட்சுமியை செந்திலுடைய அம்மா மரகதத்திற்கு முன்பே தெரியும். சேது லட்சுமியின் நடத்தை சரி இல்லை என்று மரகதம் சொல்கிறாள். இதனால் செந்தில் அமுதா இரண்டுப் பேரும் குழம்பி போகிறார்கள்.
உண்மையில் சேது லட்சுமி நல்லவரா, கெட்டவரா? அவருக்கு உதவி செய்யும் ராஜு யார்? மரகததிற்கு சேது லட்சுமியை எப்படி தெரியும்? என்ற கேள்விகளுக்கும், செந்தில் அமுதா இணைந்தார்களா என்ற கிளைக் கேள்விக்கும் பதில் சொல்கிறது மீதிக் கதை.
கதாபாத்திரங்கள்
கதையில் வரும் கதாபாத்திரங்களில், எந்த சுயநலமும் இல்லாமல் உதவும் ராஜூவும், தன் சோகத்தை மறைத்து மற்றவர்களை வாழ வைக்கும் சேது லட்சுமியும் மனதில் நிற்கிறார்கள்.
கதை அலசல்
+க்கள்
மரகதம் பக்கம் இருந்து பிளாஷ்பேக் வழியாக சேது லட்சுமி நல்லவர் தானா என்ற சந்தேகத்தை கொடுத்து அதற்கு விளக்கம் கொடுத்திருப்பது இன்ட்ரஸ்டிங் ஆக இருக்கிறது.
இக்கட்டான நிலைமையில் இருந்து தப்பித்து, தைரியமாக தன் சொந்தக் காலில் நின்று மற்றவர்க்கும் உதவுபவராக முக்கிய கதாபாத்திரத்தை படைத்திருப்பது பாராட்டுக்குரியது.
-க்கள்
அவ்வளவு கோபம் வைத்திருக்கும் மரகதம் இன்ஸ்டன்ட் ஆக சேது லட்சுமி சொன்ன உடன் அப்படியே நம்புவதை நம்ப முடியவில்லை.
மொத்தத்தில், நல்ல ஒரு குடும்ப நாவல். இது வரை கதையை படிக்காதவர்கள் மிஸ் செய்யாமல் கட்டாயம் படியுங்கள்.
அடுத்து Chillzee KiMo வில் வெளியாகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் பத்மினி செல்வராஜின் 'அழகான ராட்சஸியே' நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
மலர்களே! மலர்களே!! போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!
- அபூர்வா