Chillzee KiMo Book Reviews - நீ தானா...! - பிந்து வினோத்
Chillzee KiMo வில் பப்ளிஷ் ஆகி இருக்கும் Chillzee.in எழுத்தாளர் பிந்து வினோத்தின் நாவல் 'நீ தானா...!'.
நம் Chillzee.inல் தொடர்கதையாக வெளிவந்து, Chillzee KiMoவில் வெளியாகி இருக்கும் கதை இது.
அந்த கதையின் சுருக்கத்தை தெரிந்துக் கொண்டு, கதையின் + & - களை அலசுவோம் வாங்க.
கதை சம்மரி:
கதையின் ஹீரோயின் சாந்தி, ஹீரோ அரவிந்த்.
பணக்கார ப்ளேபாயான அரவிந்த் சாந்தியை விரும்பி கல்யாணம் செய்துக் கொள்கிறான். ஸ்மூத்தாக போகும் அவர்களுடைய வாழ்க்கையில் அரவிந்த் நிறுவனத்தில் இருந்து காணாமல் போகும் 200 கோடி ரூபாய் வடிவில் பிரச்சனைகள் வருகிறது.
சாந்தி அந்த பணத்தை எடுத்திருப்பதாக ரெக்கார்டுகள் காட்டுகிறது. இல்லையென்று சொல்கிறாள் சாந்தி. அப்படி என்றால் யார் தான் அந்த பணத்தை எடுத்தார்கள் என்று கண்டுப்பிடிக்க முயற்சி செய்கிறார்கள்.
அதற்கான பதிலை கண்டுப்பிடிதார்களா, சாந்தியின் மீது இந்த பழியை போடக் காரணம் என்ன என்ற எக்ஸ்ட்ரா கேள்விக்கான பதிலும் தெரிந்ததா என்பது மீதிக் கதை.
கதாபாத்திரங்கள்
கதாபாத்திரங்களில் ஹீரோயின் சாந்தி மனதில் நிற்கிறாள்.
கதை அலசல்
+க்கள்
கதையில் வரும் கதாப்பாத்திரங்களின் படைப்பு நன்றாக இருக்கிறது.
முதல் அத்தியாயத்தில் இருந்து கூடவே வரும் 'யார் அந்த கல்ப்ரிட்' எனும் கேள்விக்கு விடைக் கிடைக்கும் போது 'அட ஆமாம்' என்று சொல்ல வைப்பது ப்ளஸ்.
-க்கள்
Hybrid Genre - காதல் / குடும்ப கதை நடுவே வரும் who dunnit வகை. இது அந்தந்த genre பிரியர்களுக்கு வேறுப்பட்ட ரியாக்ஷன்களை கொடுக்கலாம்
சாந்தி இவ்வளவு சீக்கிரம் அரவிந்தை மன்னித்திருக்க கூடாது என்று தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை.
மொத்தத்தில், ரூட்டின் குடும்ப நாவல்களில் இருந்து மாறுப்பட்டு குடும்பம் கூடவே சஸ்பென்ஸ் கலந்த நல்ல ஒரு கதை.
இது வரை படிக்காதவர்கள் கட்டாயம் படியுங்கள்.
அடுத்து Chillzee KiMo வில் வெளியாகி இருக்கும் Chillzee KiMo எழுத்தாளர் ஸ்ரீஜா வெங்கடேஷின் 'மலர்களே! மலர்களே!!' நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
நீ தானா...! போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள்.
- அபூர்வா