(Reading time: 3 - 5 minutes)
வானமென்னும் வீதியிலே..... - ஸ்ரீஜா வெங்கடேஷ் [Vaanamennum veedhiyile.... - Srija Venkatesh]
வானமென்னும் வீதியிலே..... - ஸ்ரீஜா வெங்கடேஷ் [Vaanamennum veedhiyile.... - Srija Venkatesh]

Chillzee KiMo Book Reviews - வானமென்னும் வீதியிலே..... - ஸ்ரீஜா வெங்கடேஷ் [Vaanamennum veedhiyile.... - Srija Venkatesh]

Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக ஸ்ரீஜா வெங்கடேஷ் பகிர்ந்து இருக்கும் நாவல் 'வானமென்னும் வீதியிலே..... - ஸ்ரீஜா வெங்கடேஷ் [Vaanamennum veedhiyile.... - Srija Venkatesh]' .

அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.

 

கதை சம்மரி:

சிவ சிதம்பரம் உமாராணி தம்பதிக்கு மூன்று மகன்கள். மூத்த மகன் சிவ குருநாதனும், இளைய மகன் சிவராமும் மேல் படிப்பு படித்து அப்பா உதவியுடன் சொந்தமாக தொழில் நடத்துகிறார்கள். இரண்டாம் மகன் சிவச் சந்திரன் அப்படி தனியே தொழில் நடத்தாமல் அப்பா, அண்ணன், தம்பி என்று மூன்று பேரின் தொழிலுக்கும் உதவியாக இருக்கிறான். இதனால் அவனுடைய அம்மா தவிர மற்றவர்கள் அவனை இளப்பமாக நினைக்கிறார்கள்.

இளைய மகனுக்கு திருமண பேச்சு ஆரம்பிக்கவும், சிவச் சந்திரனுக்கு கல்யாணம் ஆகவில்லையே என்று வருந்துகிறார் ராணி. அவரே அவனுக்காக சூர்யா என்ற பெண்ணை கண்டுப்பிடிக்கவும் செய்கிறார். தம்பிக்கு பணக்கார வீட்டு பெண்ணுடன் கல்யாணம் நடக்கும் போது அவனுக்கும் சூர்யாவிற்கும் கல்யாணம் நடந்தால் பண பிரச்சனை வரலாம் என்று முடிவு செய்து சிவச் சந்திரனும் சூர்யாவும் பதிவு திருமணம் செய்துக் கொள்கிறார்கள்.

கல்யாணத்திற்கு பிறகும் வீட்டில் சச்சரவுகள் தொடர்கின்றன. எப்போதும் பொறுமையுடன் இருக்கும் சிவச் சந்திரன், சூர்யாவை மற்றவர்கள் அவமானப் படுத்தி விடவும், ஒரு கட்டத்தில் பொங்கி எழுகிறான். தனியே தொழில் தொடங்கி வெற்றி பெறப் போவதாக முடிவு செய்து மனைவியோடு வீட்டை விட்டுப் போகிறான்.

சிவச் சந்திரன் வெற்றிப் பெற்றானா? அவனைப் பற்றி அவனுடைய குடும்பத்தினர் புரிந்துக் கொண்டார்களா என்பது மீதிக் கதை.

 

குடும்ப நாவல் வாசிக்கும் ரீடர்ஸ்க்கு பிடிக்கும் நாவல்.

    

டுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக அகிலாண்ட பாரதி பகிர்ந்திருக்கும் நீர்வழிப்படூஉம் புணைபோல.. - அகிலாண்ட பாரதி [Neervazhippadooum punaipola.. - Akhilanda Bharati] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.

வானமென்னும் வீதியிலே..... - ஸ்ரீஜா வெங்கடேஷ் [Vaanamennum veedhiyile.... - Srija Venkatesh] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- முதல் தொடங்குகிறது!

- அபூர்வா

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.