Chillzee KiMo Book Reviews - வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ - சசிரேகா [Vannam konda vennilave vaanam vittu vaaraayo - Sasirekha]
Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்து இருக்கும் நாவல் 'வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ - சசிரேகா [Vannam konda vennilave vaanam vittu vaaraayo - Sasirekha]' .
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கதை சம்மரி:
கிராமத்தில் பிறந்து வளர்ந்த வெண்ணிலா அவளுடைய பெரியப்பா மகள் கவிதா காதலிப்பது தெரிந்து அதிர்ந்து போகிறாள். அக்காவை காதலிப்பவன் அவளை கைவிட்டுவிடுவானோ, கெட்டவனாக இருப்பானோ என்று பயந்து இருவரையும் பிரிக்க முயற்சி செய்கிறாள். ஆனால் கவிதாவை காதலிக்கும் பிரவீன். நல்லவன். எல்லா பிரச்சனைகளையும் தாண்டி கவிதாவை கல்யாணம் செய்துக் கொள்கிறான். இதனால் வெண்ணிலாவிற்கு காதல் என்றாலே வெறுப்பு ஏற்படுகிறது. காதல் குடும்பத்தை பிரிக்கும் என்ற முடிவுக்கு வருகிறாள்.
வெண்ணிலாவிற்கும் ஆதவனுக்கும் திருமணம் நடைபெறுகிறது. தன் மனைவி தன்னை காதலிக்க வேண்டும் என எதிர்பார்க்கிறான் ஆதவன். வெண்ணிலாவோ மனைவி எனும் கடமையை செய்வேன், காதலிக்க முடியாது என்று மறுக்கிறாள். இவர்கள் இருவரின் பிரச்சனைக்கு ஆதவன், வெண்ணிலா இரண்டுப் பேரின் பெற்றவர்களும் தெரிந்தோ தெரியாமலோ எண்ணெய் ஊற்றி வளர்க்கிறார்கள்.
வெண்ணிலா ஆதவனை புரிந்துக் கொண்டாளா? மனம் மாறினாளா என்பது மீதிக் கதை.
அடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் - சசிரேகா [Edhetho ennam valarthen - Sasirekha] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
வண்ணம் கொண்ட வெண்ணிலவே வானம் விட்டு வாராயோ - சசிரேகா [Vannam konda vennilave vaanam vittu vaaraayo - Sasirekha] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!
- அபூர்வா