Chillzee KiMo Book Reviews - உள்ளத்தால் உன்னை நெருங்குகிறேன் - சசிரேகா [Ullathal unnai nerungugiren - Sasirekha]
Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்து இருக்கும் நாவல் 'உள்ளத்தால் உன்னை நெருங்குகிறேன் - சசிரேகா [Ullathal unnai nerungugiren - Sasirekha]' .
அந்த நாவலைப் பற்றி இங்கே பார்ப்போம்.
கதை சம்மரி:
சேதுபதி தன் தாத்தா மீது அதிக அன்பு வைத்திருப்பவன். அவர் சொல்வதை கண்ணை மூடிக் கொண்டு செய்பவன். கிராமத்திற்கு நன்மை நடக்கும் என்று தாத்தா பக்கத்து ஊர் பெண் உஷாவை கல்யாணம் செய்துக் கொள்ள சொல்கிறார். உஷா சுந்தரனை காதலிப்பது தெரிந்தும் தாத்தாவிற்காக அவளை கல்யாணம் செய்துக் கொள்கிறான் சேதுபதி. கல்யாணம் முடிந்த கையோடு உஷா சுந்தரனோடு ஓடிப் போகிறாள். இதனால் சுந்தரனை காயப் படுத்துகிறான் சேதுபதி.
இந்த வழக்கு சேதுபதியின் உறவினர் சிவலிங்கம் முன் வருகிறது. மூன்று கிராமம் கலந்த பிரச்சனையை விசாரித்து தீர்ப்பு வழங்குகிறார் நீதிபதி. சேதுபதி தன் தாத்தா பேச்சைக் கேட்டு நடப்பதால் தவறு செய்கிறான் என்று புரிந்து அவனை தாத்தாவை விட்டு தள்ளி இருக்க சொல்கிறார். அவனை அவர் வீட்டிலேயே தங்க வைக்கிறார். அந்த நேரத்தில் சிவலிங்கமின் மகள் சுரபியும், அவருடைய நண்பர் மகள் சங்கமித்ராவும் படிக்க அங்கே வருகிறார்கள்.
சேதுபதி திருந்தினானா? உஷா, சுரபி, மித்ரா இவர்களில் யாரை விரும்பினான், யாரை கைப் பிடித்தான் என்பது மீதிக் கதை.
அடுத்து Chillzee KiMo வின் திரு சுஜித் நினைவு தமிழ் - ஆங்கிலப் போட்டிக்காக சசிரேகா பகிர்ந்திருக்கும் உன்னைக் காணாது உருகும் நொடி நேரம் - சசிரேகா [Unnai kaanaathu urugum nodi neram - Sasirekha] நாவல் அலசலுடன் மீண்டும் சந்திக்கலாம்.
உள்ளத்தால் உன்னை நெருங்குகிறேன் - சசிரேகா [Ullathal unnai nerungugiren - Sasirekha] போல இன்னும் பல இனிமையான, தரமான கதைகளை ரிலாக்ஸ்டாக படிக்க, இன்றே Chillzee KiMo பக்கம் செல்லுங்கள். சப்ஸ்க்ரிப்ஷன் ரூபாய் 50/- ($1.49) முதல் தொடங்குகிறது!
- அபூர்வா