(Reading time: 1 - 2 minutes)
Comedy Stories
Comedy Stories

Comedy Stories - கல்யாணமாகி 10 வருஷம் ஆகிடுச்சு!!!

  

மாமியார்:- மாப்ளே! கல்யாணத்திற்கு அப்புறமா முதல் முறையா இன்னிக்குத் தான் சமைக்க ஆரம்பிச்சிருக்கீங்க, சரி! அதுக்காக, சாம்பார்ல இப்படியா உப்பை அள்ளிக் கொட்றது?

  

மருமகன்:- அத்தே! சமைச்சு முடிச்சுட்டு உங்க பொண்ணுக்கிட்டத் தான் உப்பு இருக்கான்னு பார்க்க சொன்னேன்.... அவதான் பார்த்துட்டு சுத்தமா இல்லேன்னு சொன்னா. அதான் மறுபடியும் போட்டேன்!

  

மாமியார்:- ஏண்டி! கல்யாணமாகி 10 வருஷம், ஆகிடுச்சி இன்னுமா உப்பு கூட பார்க்க தெரியல!

  

மகள்:- அவரு சொன்ன உடனேயே போய் பார்த்தேம்மா... முருங்கைக் காய், வெண்டைக்காய், கத்திரிக்காய், தக்காளி.... போதாததுக்கு, கடுகு, கறிவேப்பிலை வரைக்கும் பார்க்க முடிஞ்சது. கடைசிவரைக்கும் உப்பு தெரியவே இல்லம்மா.. அதான் சொன்னேன்!

  

😀😀😀😀😀

   

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.