Comedy Stories - ஏன் கண்ணாடி வாங்கல?
முதலாளி வேலைக்காரனிடம் ஒரு கண்ணாடி வாங்கி வர சொன்னார்.
"கண்ல போடுற கண்ணாடியா.."னு கேட்டதும் முதலாளி கோபத்தில்....
"யோவ்... ஷேவ் பண்றதுக்குய்யா.... என் முகம் தெரியுற மாதிரி ஒண்ணு வாங்கி வா..." என்று அனுப்பி வைத்தார்.
வேலைக்காரன் திரும்பி வரவேயில்லை. நீண்டநேரத்திற்கு பின் மூச்சு வாங்க வெறுங்கையோடு வந்த வேலைக்காரனிடம் ஏன் கண்ணாடி வாங்கலன்னு கேட்டார் முதலாளி.
"பஜார் முழுக்க அலைஞ்சேன் முதலாளி.. ஆனாலும் நீங்க கேட்ட மாதிரி கண்ணாடி கிடைக்கல. அதுதான் வாங்கல”
" ஏன்.. பெருசாவா இருந்துது..?"
"இல்ல... சின்னதாத் தான் இருந்துது.."
"பிறகு ஏன் வாங்கல..?"
" எல்லா கண்ணாடியிலும் என் முகம் தான் தெரிஞ்சுது. அது தான் வாங்கல..."
😀😀😀😀😀